April 13, 2005

என் ஜன்னலுக்கு வெளியே

ஒரு ஒன்னரை வாரம் முன்னாடி அவர்கள் வந்தார்கள். ஒருவர் கொஞ்சம் சாதாரனமாகவும் மற்றவர் நல்ல பருமனாகவும் இருந்தார். முதலில் இடமெல்லாம் வசதியா இருக்கா என்று நோட்டம் விட்டார்கள். தொட்டுப் பார்த்தனர், தட்டிப் பார்த்தனர், உரசிப் பார்த்தனர். பின் மறைந்துவிட்டனர்.
ஒரு அரை மணி நேரம் கழித்து 'நங்' என்று சத்தம் வந்தது. அவர்கள் என் ஜன்னலின் வெளித்தட்டில் முதல் (கல்) குச்சியை நட்டனர், சரி சரி, வைத்தனர்.

அன்றிலிருந்து அரை மணி ஒரு மணிக்கு ஒரு தரம் ஒரு 'குருகுக்கூஉ உ ' அல்லது ஒரு 'உஉஉயூஊ..' தான். இப்பொ நல்ல காற்றோட்டமா, சொகுசா செட்டில் ஆயாச்சு.

நேற்று பார்த்தேன், இரண்டு ரோஸ் நிற முட்டைகள் தயார். அப்ப அப்ப திரும்பி வாகு மாற்றிக்கொண்டு மறுபடியும் ஒரு 'குருகுக்கூஉ உ '. நல்ல வெயில் காய்கிறது. முதல் மாடியில் வாசம். நேரம் கிடைச்சா அப்படியே எட்டி நம்ம கணினித் திரையில் லேட்டஸ்ட் நியூஸ் மேலோட்டம் விடுவார். நான் கேட்கும் இசை பிடிச்சா நம்ம பக்கம் பார்கிறார் பிடிக்கலைன்னா அப்படியே கழுத்தை மட்டும் திருப்பிக் கொள்கிறார். ரொம்ப ஸ்டிரிக்டு.

வேற வேலையே ஓடறதில்லை. எப்பொ குஞ்சு பொரியுமோ தெரியலை. புத்தாண்டு ரிலீசுக்காக வெய்ட்டிங்!

5 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

:)

பாலு மணிமாறன் said...

கனவுகள், கற்பனைகளைவிட, ஜன்னல் வழியே பார்க்கிற நிஜங்கள்...பார்ப்பதற்கும், பதிவதற்கும், படிப்பதற்கும், சுகமாகத்தான் இருக்கிறது

துளசி கோபால் said...

அன்பு யக்ஞா,

அருமை! குழந்தை 'பொரிச்சவுடன்' படம் போடுங்க!

அம்மா ஜாடையா இல்லெ அப்பாவான்னு பாக்கணும்-)))))

என்றும் அன்புடன்,
துளசி.

Yagna said...

பாலு, அது என்னமோ சரிதான். ஒரு விதத்தில் குழந்தைகள் மற்றும் பிரானிகளின் உலகே தனி. அவர்களுக்கு கள்ளம் கிடையாது, எதிர்பார்ப்புகள் கிடையாது.
துளசி, கண்டிப்பா போடுறேன். அப்படியே ஜாடையும் சொல்லிடுங்க. :-p

Adaengappa !! said...

அடேங்கப்பா !!