என் சிந்தனைச் சிதறல்கள், நேரடி இனையம் வழியே! கொஞ்சம் மெய் மீதி மை...
December 20, 2005
மீண்டும் வாழ்க சென்னை சைபர்கிரைம்!
December 09, 2005
மையம்.தமிழ்மணம்.காம்
மையம்.தமிழ்மணம்.காம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த விக்கி என்னுடைய முந்தைய பதிவில் கிடைத்த ஆலோசனைகளின் பேரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கே பல்வேறு தமிழ் கணினிமயமாக்கல் மற்றும் தமிழ் மென்பொருள் முயற்சிகளை ஓர் இடத்தில் தொகுக்க திட்டம். தற்சமயம் ஒரு தோராயமான வடிவமைப்பில் சில சோதனை தகவல்கள் உள்ளிட்டிருக்கிறேன். மேலும் அடி எடுத்து வைக்க தங்களின் ஆக்கப்பூர்வமன் கருத்துக்கள் மற்றும் உதவியை நாடுகிறேன். விருப்பமுள்ளவர்கள் இங்கே மறுமொழியிடவும். மேலும் விவரங்கள் விரைவில்...
December 06, 2005
சென்னை: காரு வாங்கலையோ காரு!
"இந்தா அவரு பேச்ச கேக்காத நைனா. நான் ஹுண்டாய்'மா. நம்ம காரு முழுக்க அசல் சேலம் ஸ்டீல்'மா. ஷாரூக் ஓட்டறாரு. அம்மா அசின் ஓட்டறாங்க. அந்தாள் காரு விலைல நம்ம வண்டி ரெண்டு வாங்கலாம்."
அய்ய மூஞ்சியபாரு. நீ நம்ம கடைக்கு வா சார். நம்மள்து பி.எம்.டபிள்யூ. பேரை சொல்லிபாரு இன்னா மர்யாத வெளில. ஒவ்வொரு காரும் உங்க அதிர்ஷ்ட கல்லு பதிச்சு அதிர்ஷ்ட எண்னுக்கு மந்திரிச்சு தருவோமுங்க...
...இதுபோல இன்னும் வோல்ஸ்வாகனம், சி.எம் மண்ணிக்கனும் ஜி.எம் அல்லாரும் வெய்ட் பன்றாங்கோ.
இதெல்லாம் மெய்யாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நேற்றைய வாஷிங்க்டன் விகடன் அதாங்க washington post'ல சென்னை அடுத்த டெட்ராய்டா அப்படினு வந்திருக்கு. சென்னையில் வாகண உதிரிபாகங்கள் தொழில் சமர்த்தாக வளர்ந்து வருகிறது. ஆட்டோலெக், விஸ்டியான், டி.வி.எஸ், யூகால், ரானே போன்றவர்கள் சர்வதேச அளவில் பேர் பெற்றவர்கள். மேலும் மேற்கூறிய வாகன உற்பத்தியாளர்களும் சென்னையில் கடை விரித்துள்ளனர். முன்னே கூறிய நம்ம ஊர் கம்புனியெல்லாம் ஜப்பானிய "தரமே நிரந்தரம்" சித்தாந்தத்தை கடைபிடிப்பவர்கள். ஆகையால் எதிர்காலம் சுபிட்சமாக உள்ளது இவர்களுக்கு. இது சம்பந்த்மாக டி.வி.எஸ்'இன் வெற்றிக்கதை ஒன்று எழுதவேண்டும். அது இன்னொரு நாள்...
November 09, 2005
சபாஷ் சென்னை காவல் சைபர்கிரைம் பிரிவு
கடந்த மே மாதம் நான் கோடை விடுமுறைக்கு சென்னை வந்திருந்தேன். நான் இங்கு தினம் பயன்படுத்தும் செல்ஃபோனையே புது சிம்கார்ட் போட்டு உபயோகித்தேன்.
ஒரு மாலை மேற்கு அண்ணாநகரில் என் கல்லூரி நன்பனுடன் கங்கா ஸ்வீட்சில் ஏதோ சாட் வகைகள் நன்றாக கபளீகரம் செய்துவிட்டு நன்பனின் வீட்டிற்கு சென்றேன். நன்பன் வீட்டில் காலடி வைத்ததும்தான் ஸ்வீட் கடையில் செல்ஃபோனை மறந்து விட்டுவந்தது உறைத்தது. உடனே கடைக்கு ஓடினால் அதற்குள் அதை யாரோ லவட்டிவிட்டார்கள். கடையிலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை, அவர்களையும் குறை சொல்லமுடியாது. செல்ஃபோனுக்கு டையல் செய்தால் மணி அடித்தது ஆனால் யாரும் எடுக்கவில்லை. அவ்வளவுதான் செல்ஃபோன் இனி கிடைக்காது, என் தொடர்புகள் பொக்கிஷம் எல்லாம் அழிந்தது என்று நினைத்தேன். எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமென்று கடைக்கு எதிரேயே உள்ள திருமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் செய்தேன். அங்கிருந்த ஏட்டு என்னை மேலும்கீழும் பார்த்துவிட்டு "என்னப்பா செல்ஃபோனெல்லாம் தொலைந்தால் கிடைக்குமா" என்றார். பொதுவாக ஒரு குழந்தையை தொலைத்தாலே கண்டுபிடிப்பது கஷ்டம், செல்ஃபோன் எம்மாத்திரம்.
ஆனால் பாருங்கள் பெரியவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களே "தம்பியுடையான் படைக்கஞ்சான்". வக்கீலுக்கு படிக்கும் என் தம்பியோ தனக்கு தெரிந்த ஒரு சைபர்கிரைம் இன்ஸ்பெக்டரிடம் பேசி ஒரே நாளில் கண்டுபிடித்து தருகிறேன் என்றான். அவன் சொன்னமாதிரியே மறுநாளே என் செல்ஃபோனும் கிடைத்தது. நம்பமுடிகிறதா?
இந்த சைபர்கிரைம் பிரிவிடம் செல்ஃபோன்களுக்கு ஒருவித விசேஷ கால் செய்யும் வசதியிருக்கிறது. இந்த விசெஷ கால் வந்தால் செல்ஃபோனில் எமர்ஜென்சி என்று வரும். முதலில் சைபர்கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் என் செல்ஃபோனிற்கு அந்த விசேஷ கால் செய்தார். எமர்ஜென்சி என்று வருவதுகண்டு செல்ஃபோனை அபகரித்த நபர் தெரியாமல் எடுத்து ஹலோ என்றிருக்கிறார். இதை இன்ஸ்பெக்டர் பதிவு செய்துவிட்டார். அடுத்து என் செல்ஃபோனிலிருந்து அன்று மாலை செய்யப்பட்ட கால்கள் பட்டியலை பார்த்தார். என் செல்ஃபோனை அபகரித்த நபர் என் ஃபோனின் நம்பர் என்ன என்று அறிந்துகொள்ள தன்னுடைய போனுக்கே சில கால்கள் செய்திருக்கிறான். இந்த இன்ஸ்பெக்டர் வரிசையாக என் செல்ஃபோனிலிருந்து காணாமல்சென்ற பிறகு கால் செய்யப்பட்ட என்கள் ஒவ்வொன்றாக டையல் செய்தார். அப்படி ஒரு காலில் எமெர்ஜென்சி காலுக்கு ஹலொ சொன்ன அதேகுரல் மீண்டும் பதிலளித்தது. திருடன் அகப்பட்டுக்கொண்டான். உடனே அந்த நபரின் ஃபோன் நம்பரை கண்டுபிடித்தார். பின் BSNL'இடமிருந்து அந்த நபரின் ஜாதகத்தையே சேகரித்தார். பின் அந்த நபரை ஃபோனில் மறுபடியும் கூப்பிட்டு உடனே என் செல்ஃபோனை உரியவரிடம் சேர்க்காவிட்டால் கைது செய்வேன் என்று எச்சரித்தார். என் செல்ஃபோனை அபகரித்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வக்கீல். போலீசின் எச்சரிக்கை கேட்டவுடனே அவருக்கு கதி கலங்கிவிட்டது. அடுத்த நிமிடமே என் வீட்டிற்கு அவர் ஃபோன் செய்து என் வீட்டிற்கே வந்து ஃபோனை திருப்பிதருவதாக சொன்னார். ஆனால் நானே நேரில் சென்று வாங்கிக்கொண்டென். அந்த இன்ஸ்பெக்டருக்கு தம்பி மூலமாக கோடானுகோடி நன்றிகளையும் தெரிவித்தேன்.
சென்னை மாநகர காவலின் சைபர்கிரைம் பிரிவு இவ்வாறாக என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவர்களின் தேர்ச்சி எனக்கு பிரமிப்பாக உள்ளது. அவர்களுக்கு மறுபடியும் ஒரு சபாஷ்.
October 22, 2005
அறிவியல் புனைவு
October 17, 2005
தோழி
எப்படிச் சொன்னாய் பெண்ணே
சில வாரங்களாய்த் தான் அறிவாயென்னை
நான் நினைத்ததில்லை
என்னை ஆக்கியோர் தந்த கண்ணியம்
அழகனில்லை
உன் பாலோரின் பித்தனில்லை
வெறியனில்லை வெருப்பவனில்லை
சட்டென நீ வம்பிழுக்கப்போகிறாய் என்றாய்
சீண்டினாய் நான் வெட்கித்தேன்
சுகமாய் இருந்தது
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
என்னை பிடிக்கிறது என் மொழியும் பிடிக்கிறதென்றாய்
உன்னளவில் என்னைப்போல் உன்னை நானறியேன்
அணுக நினைத்தேன் வாய்க்கவில்லை
நட்பின் படிவங்கள் பல அறிவேன்
கற்றது பிட்டளவே கற்க வேண்டியது டெர்ராக்கள்
ஏனோ பாரதி தோன்றிமறைகிறான்
புதிராக இல்லை புரியவுமில்லை
தன்னிலை அறிவேன் எல்லைகளறிவேன்
என்ன அவசரம்
ஒழிந்தபொழுது கண்விளி
பகிர்ந்துகொள்ள பிரபஞ்சமே கிடக்கிறது.
**கவிதை எழுதக்கூடாது என்ற விரதம் இத்துடன் முடிகிறது. :-) மீண்டும் சிறிது நேரத்தில் தொடங்கும்.**
September 24, 2005
விடுதலை - சிட்டுக் குருவி
விடுதலை - சிட்டுக் குருவி
பல்லவி
சிட்டுக் குருவியைப் போலே.
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு
பீடையி லாதோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு
முன்கொண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லி தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று
இங்கு வந்தபின் முதல் பனிக்காலத்தில் யாருமில்லாத ஒரு காலைப் பொழுதில், என் சித்தப்பா குடுத்த பித்துக்குளி முருகதாஸின் ஒலிநாடாவில் முதல்முறை இந்த பாடலைக் கேட்டேன். அதன் சிந்தனையும் எளிமையும் சட்டென்று என்னை கவர்ந்தது. உடனே முணுமுணுக்க தொடங்கிவிட்டேன். பின்புதான் தெரிய வந்தது இது பாரதியின் படைப்பென்று. மகாகவின்னா சும்மாவா?
June 29, 2005
A Brief History of Time: தமிழில்
ஒரு வரலாற்றுச் சுருக்கம்
ஸ்டீஃபன் ஹாக்கிங்
Tamil Translation of - "A BRIEF HISTORY OF TIME"
தமிழாக்கம்: நலங்கிள்ளி
பதிப்பாசிரியர்: தியாகு
வெளியீடு:
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை
சிகாகோ, அமெரிக்கா
ISBN: 0-9676-212-2-4
இந்த மே மாதம் சென்னை சென்றபோது வாங்கிவந்தேன். நான் வாங்கிய பிரதி இரண்டாம் பதிப்பாம் [2005]. பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் ஓர் பொது அறிவியல் நூல் வெளிவந்து அதுவும் சுஜாதாவின் புத்தகமாக அல்லாது இரண்டாம் பதிப்பெல்லாம் வருவது [மொழி பெயர்ப்பானாலும்] கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.
நான் இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில்கூட படித்ததே கிடையாது. நேரடியாக தமிழில் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். கனஜோராக இருக்கிறது.
இதன் மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து:
"... 1995 வரை ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் வளர்ச்சிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளுன. பல கலைச்சொற்களுக்கு இன்னும் தமிழாக்கம் வராத நிலை! எனவே ஒவ்வொரு சொல்லையும் தமிழாக்குவதற்கு முன் நீண்ட பெரும் விவாதம் செய்ய நேர்ந்தது. குறிப்பாக தந்திக் கோட்பாடு, காலப் பயனம் பற்றியெல்லாம் பேசும் நூல்கள் தமிழில் அரிது. எல்லாமே தமிழுக்கு புதிது!
அணுவின் அடிப்படைத் துகள்கள் பலவற்றுக்குத் தமிழ்ச் சொற்களே இதுவரை இல்லாத நிலையிலும், இந்நூலில் கிட்டதட்ட எல்லா அணுத் துகள்களுக்குமே தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குவாண்டம், என்ட்ராபி போன்றவை பழைய அறிவியல் செய்திகள் என்றாலும் இந்தச் சொற்களுக்கும் தமிழாக்கம் இல்லை. இவை போன்ற பல சொற்களையும் கூட தமிழாக்க முயற்சி செய்துள்ளோம்....."
இப்புத்தகத்தில் பயன்படுத்தியுள்ள கலைச்சொற்களையும் பட்டியலிட உத்தேசம். படித்து முடித்தபின் மதிப்புரையுடன் பதிவு செய்கிறேன்.
June 27, 2005
அண்ணா பல்கலைக்கழகம்: ஒரு வழியாக புதிய துனைவேந்தர்
எனக்குத் தெரிந்து கடந்த எட்டு வருடங்களில் இவர் அந்த பக்கமாக வந்ததே கிடையாது. இந்த முறை எப்போதும் இல்லாதவகையில் நிறைய குழப்படிகளின் மத்தியில் புதிய துனைவேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில் ஒரு தேர்வுக்குழு அமைத்து அதன் பரிந்துரையின்படி தமிழக ஆளுநர் புதிய துனைவேந்தரை நியமனம் செய்யவேண்டும். ஏப்ரல் மாதத்தில் அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டு அப்போதைய துனைவேந்தராக இருந்த முனைவர் பாலகுருசாமியின் பெயரையே அது பரிந்துரைத்தது. உடனே ஆளுநர் அந்த தேர்வுக்குழுவின் பணியில் திருப்தியில்லை என்று அதை கலைத்துவிட்டார். பின் ஒன்னரை மாதமாக முதல்முறையாக துனைவேந்தரே இல்லாமல் அண்ணா பல்கலைகழகம் இயங்கிவந்தது. இப்பொழுது இரண்டு நாள் முன் திடீரென்று புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் அண்ணா பல்கலைக்கழக துனைவேந்தர் என்பது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பதவியாகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருவர், அதிமுக வந்தால் அவர் நீக்கப்பட்டு வேரொருவர் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் துனைவேந்தர்கள் குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணனுக்கு பிறகு நிலையாக எவரும் செயல்படவில்லை. எங்குபோய் முடியுமோ தெரியவில்லை. அண்ணா பல்கலைகழகம் போன்ற அதிமுக்கியமான ஸ்தாபனத்தில் அதுவும் தனியார் கல்லூரிகளின் ஆதிக்க சண்டை நடந்துவரும் இவ்வேளையில் இப்படி ஒரு நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது.
May 31, 2005
தமிழ் மென்பொருள் விவாத கூட்டம்
April 28, 2005
சச்சின்
குழந்தைகள் ஆரவாரம் அடங்கி ஆச்சாரியரின் கையை கூர்ந்து கவனித்தனர். ஆச்சாரியர் நெற்றிக்கண் வடிவிலொரு சிறு குழியை தோண்டினார். ஒரு மாணவனை அழைத்து ஒரு நாலு தப்படிகள் தள்ளி நிற்க செய்தார். இருபுறமும் கூர்மையான அந்த மரத்துண்டை குழியின் மீது குறுக்காக வைத்தார். இன்னொரு மாணவனை தண்டத்தால் அதை கெந்த செய்தார். காற்றில் அந்த மரத்துண்டு பறக்க ஆரம்பித்தவுடன் தள்ளி நிற்கும் மாணவனை அதை பிடிக்கும்படி பணித்தார். அவனும் அதை தாவி பிடித்தவுடன் சுற்றிலும் இருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். ஆச்சாரியர் அந்த மரத்துண்டு தான் "கில்லி" என்றார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் கில்லியின் மீது மோகம் பிடித்து அலைந்தனர். கௌரவர்களில் துச்சாதனன் கில்லி அடிப்பதில் நிகரற்ற திறன் பெற்றிருந்தது எல்லொருக்கும் புரிந்தது. பீமன் ஒவ்வொரு தடவையும் தண்டத்தை உடைப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மற்றவர்கள் சுமாராக ஆடினாலும் ஆட்டம் புதிதாகவும் வித்தியாசமாக இருந்ததனால் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த ஆட்டத்தை மற்ற அரசகுமாரர்களுக்கும் காண்பித்து வியப்பிலாழ்த்த விரும்பினர். ஆட்டதில் இருந்த பரபரப்பில் மாணவர்களுக்குள் அவ்வப்போது சச்சரவுகளும் முளைத்தன. இப்படி ஒரு சமயத்தில் தான் கண்ணன் வரும் செய்தி வந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் துரியோதனன் உனர்ந்தான். பாண்டவர்களை வம்பிழுக்க வாய்ப்பை பயன்படுத்த உத்தேசித்தான். அச்சாரியரிடம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு மத்தியில் கில்லி போட்டி நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தான். ஆச்சாரியரும் சிறுபிள்ளை விளையாட்டு தானே என்று நினைத்து சம்மதித்தார்.
அந்த நாளும் வந்தது. கண்ணனும் காலை ரதத்தில் வந்த களைப்பு தீர இளைப்பாறி கொண்டிருந்தான். பாண்டவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தான். பேச்சுவாக்கில் பீமன் மாலை நடக்க உள்ள போட்டிபற்றி கூறினான். துரியோதனன் அழைத்த போட்டியை அறிந்தவுடன் கண்ணனும் ஏதோ யோசித்தான். மாலையானதும் எல்லொரும் திடலுக்கு கிளம்பினர். கண்ணன் சிறிது தாமதமாக வருவாதக கூறி எங்கோ சென்றான். திடலில் எல்லோரும் வந்தமர்ந்ததும், ஆச்சாரியர் கில்லி ஆட இரு அணிகளையும் அழைத்தார். துரியோதனாதிகள் ஒரு பக்கமும் பஞ்ச பாண்டவர்கள் மறுபக்கமும் குழுமினர். ஆச்சாரியர் கில்லியை கெந்துபவோர் தத்தம் தண்டங்களுடன் வர வேண்டுமென்றார். துரியோதனன் முன்வந்து போட்டியை துவக்கும்முன் தனக்கும் ஒரு சின்ன நிபந்தனை இருப்பதாக அறிவித்தான். என்ன இருந்தாலும் சூட்சமம் இல்லாமல் துரியோதனன் கிடையாதே. பாண்டவர்களில் கில்லியாட்டத்தின் பிரதான தாசனான தருமன், பரபரப்பில் சிந்திக்காமல் நிபந்தனை ஏதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார். இதை திட்டமிட்டு எதிர்பார்த்த துரியோதனன் கூடியிருந்தோர் நன்மைக்காக தன் நிபந்தனையை அறிவித்தான். கட்டை குரலில் கர்ஜித்தான் "இரு அணிக்கும் அணித்தலைவராக ஒருவர் இருக்கவேண்டும். அணித்தலைவர் ஒவ்வொரு முறையும் யார் ஆடவேண்டும் என்று தேர்வு செய்யலாம். தலைவர் தேவைக்கேற்ப யாரை வேண்டுமானாலும் ஆட அழைக்கலாம். எங்கள் அணிக்கு நான் தலைவன், பாண்டவர்களுக்கு தருமன்". யாருக்கும் ஒன்றும் புரியவில்லை சும்மா தலையாட்டினார்கள்.
விநாயகரை பிரார்தித்து துச்சாதனன் தொடங்கினான். கில்லியை பிரமாதமாக கெந்தினான். பாண்டவர்கள் "கோழி பிடிப்பதே மேல்" என்று சிலாகித்தனர். வெகு நேரம் கழித்து அவன் அயர்ச்சியுற்றதால் ஒருவாறாக அவன் ஆட்டம் முடிந்தது. அணிகள் மாறி மாறி மூன்று முறை கெந்துவதாக முடிவு செய்யபட்டிருந்தது. ஆதலால் பாண்டவர்கள் முறை வந்தது. அவர்களில் சிறந்து விளையாடும் நகுலன் முதலில் ஆடினான். ஆனால் அவன் வெகு சீக்கிரத்தில் ஆட்டமிழந்தான். இப்பொழுது தான் துரியோதனன் தன் சதியை அவிழ்த்துவிட்டான். எல்லோரும் ஒரு முறை தான் கெந்தலாம் என்று ஆட்டத்தின் விதி. ஆனால் தான் போட்ட நிபந்தனையின் அடிப்படையில் துச்சாதனனையே மறுமுறை ஆட அழைத்தான். இப்பொழுது புரிந்தது தருமருக்கு தன் மடத்தனம். ஆனால் ஒப்புக்கொண்டாகிவிட்டது இனி எதிர்க்க முடியாது. துச்சாதனன் இந்த தடவை முதன்முறைவிட மேலும் சிறப்பாக ஆடினான். மூன்றாவது முறையும் அவனே ஆடி கௌரவர்களுக்கே வெற்றி என்று கிட்ட தட்ட நிச்சயம் செய்துவிட்டான். அப்பொழுது தான் கண்ணன் அங்கு வந்தான். கூடவே அவர்கள் வயது ஒத்த ஒரு சிறுவனையும் அழைத்து வந்தான். வந்ததும் வராததுமாக தருமன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். தருமன் சிறு புன்சிரிப்புடன் தன் அணிக்காக மூன்றாவது முறையில் அந்த புது சிறுவன் ஆடுவானென்று அறிவித்தான். துரியோதனன் இந்த சிறிது குள்ளமான புதியவன் என்ன செய்துவிடுவான் என்று எகத்தாளமாக புதியவனை ஆட அனுமதித்தான்.
புதியவனிடம் தண்டம் இல்லை. கண்ணன் உடனே அருகே கீழிருந்த மட்டை ஒன்றை எடுத்து குடுத்தார். புதியவன் கெந்த ஆரம்பித்தவுடன் கௌரவர்கள் இங்கும் அங்கும் ஒடினார்களே ஒழிய புதியவனின் ஆட்டத்திற்கு பதில் தெரியாமல் விழித்தார்கள். புதியவன் புயல் போல் ஆடி பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கிக் குடுத்தான். கௌரவர்கள் வாயை பிளந்து பார்த்தனர். துரியோதனன் சற்று சுதாரித்துக்கொண்டு, புதியவனை அணியில் சேர்தது தவறு என்று ஆச்சாரியரிடம் முறையிட்டான். ஆச்சாரியரோ துரியோதனனின் நிபந்தனை படி எல்லாம் சரியே என்று தீர்பளித்தார். வெற்றி கோலாகலத்தின் மத்தியில் தருமன் புதியவனின் பெயரை கேட்டான். புதியவன் "சச்சின், முழு பெயர் சச்சிதாணந்தம்" என்றான். கண்ணன் பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கி குடுத்த அவனுக்கு அடுத்த ஜென்மத்திலும் மட்டை ஆளுவதில் உலக புகழ் அடைய வரமருளினார்.
இது நான் முதன்முதலில் ஆதிமரத்தடியில் எழுதிய கதை. இப்பொழுது படித்துப் பார்த்தேன். அங்கங்கே கரடுமுரடாக இருக்கிறது, சில சின்னங்சிறிய மாற்றங்களுடன் அப்படியே உள்ளிட்டிருக்கிறேன். யாரும் நான் வெரும் நுட்பவியலாளன் என்று மட்டும் நினைத்துவிடக்கூடாதே! நாளை நான் ஒரு மாத விடுப்பில் சென்னை செல்கிறேன். அநேகமாக அடுத்த பதிவு சென்னையிலிருந்து!
April 27, 2005
Firefox'ல் என்ன பிரச்சினை?
இதற்கு voice on wings (தமிழில் பெயர் வெச்சுக்க கூடாதா?) ஒரு தற்காலிக நிவாரணம் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை தமிழுக்கு மட்டுமில்லை ஏனைய இந்திய மொழிகள், தாய், பர்மீஸ், அரபி, ஹீப்ரு போன்ற மொழிகளுக்கும் உண்டு. இந்த மொழிகளை சரியாக காண்பிக்க Complex Text Layout rendering engine தேவைப்படுகிறது. பொதுவாக விண்டோஸில் வரும் மென்பொருட்கள் MS'ன் Uniscribe dll'ஐ பயன்படுத்தி இம்மொழிகளை காண்பிக்கலாம். லினக்ஸில் இதே வேலைக்கு pango பயன்படுத்துகின்றனர். இவை தவிர ICU மற்றும் SIL Graphite'ம் களத்தில் உள்ளனர். (நன்றி voice on wings). மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸில் லினக்ஸ் வெளியீடில் pango பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக மற்ற இந்திய மொழிகளை காட்டிலும் மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸில் தமிழுக்குதான் font support நிறைய. அதனால் தற்போது தமிழ் எழுத்துருவிற்காக custom rendering code தான் உபயோகிக்கிறார்கள். Uniscribe கொண்டு தமிழ் பாவிக்க முடியுமா என்று தெரியவில்லை. இதைப்பற்றி எழுத்துரு பெரும்புள்ளி Jungshik Shinக்கு அஞ்சல் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும்பொழுது விடையளிப்பார் என நம்புவோம்.
தற்போதைய நிலவரம்:
- இந்த ஒழுங்கமை (justify) பிரச்சினை எல்லா CTL மொழிகளிலும் உண்டு
- Uniscribe, Pango support இன்னும் முழுமையாக இல்லை
- நமக்கு இந்த பிரச்சினை சிறிய ஆனால் பரவலான பிரச்சினைதான். இது மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸில் உள்ள அடிப்படை குறையாகும்
- Voice on wings கூறியதுதான் சாலச் சிறந்த வழி
- C/C++ நல்ல தேர்ச்சியுடயவர்கள் மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸின் மூலத்தில் கை வைக்கவேண்டும், இது மண்டைகாயும் விவகாரம் போல் தெரிகிறது. யாராவது விஷயம் தெரிந்தவர்கள் தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும். இதுபற்றி தமிழ்லினக்ஸில் போனவருடம் விவாதம் நடந்தது. மேற்கொண்டு ஏதும் நடந்ததாக தெரியவில்லை. இது சம்பந்தமாக வசீகரனுக்கும் அஞ்சல் செய்துள்ளேன்.
- தமிழ் வலைஞர்கள் தங்கள் ஆக்கங்களில் ஒழுங்கமைக்கும் வசதியை (text-justify) பயன்படுத்துவதை தவிர்க்கலாம்
- மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸின் தமிழ் பொதியில் voice on wings சொன்ன userContent.css'ஐ முன்னதாகவே நிறுவி வினியோகிக்கலாம்.
April 21, 2005
ராமானுஜன் பரிசு
அப்புறம் 1965'ல் பொருளியலில் நொபெல் வழங்க ஆரம்பித்தார்கள் (இது அசல் நொபெல் இல்லை). இப்பொழுது 2001'ல் அறிவியல் பிரிவுகளில் ரானியம்மா, கணிதத்திற்கு நொபெல் போல் ஏபெல் பரிசு வழங்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த கணித நொபெல், அதாங்க ஏபெல் பரிசு குழுவினர் அப்துஸ் சல்மான் சர்வதேச துனிபு இயற்பியல் மையம் மற்றும் சர்வதேச கணித இணையம், இந்த வருஷம் ராமானுஜன் பரிசு என்றொரு பரிசு நிறுவியிருக்கிறார்கள். வளர்ந்து வரும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சாதனைபுரிந்த இளம் கணிதவியலாளருக்கு இது வழங்கப்படும். அம்மாடியோவ்!...
இனி கணிதமேதை ராமானுஜனுக்கு அங்கீகாரம் கிடைக்குமா/கிடைத்ததா என்ற கேள்விகள் எல்லாம் புறந்தள்ளுங்கள். இன்று ராமானுஜனின் பெயரால் மற்றவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
April 18, 2005
தமிழ் கணினிமயமாக்கல்: சுட்டிகளால் ஓர் அறிமுகம்
"வெல்லத் தமிழ் இனி மெல்ல சாகும், கணினித் தமிழே இனி வாழும்"
என்பது எல்லோரும் அறிந்ததே. :-D. திடீரென்று தமிழ் புத்தாண்டிற்கு இந்திய அரசு சில தமிழ் மென்பொருள்களை பொட்டலம் கட்டி ஒரு வட்டு வெளியிட்டிருக்கிறது. தமிழில் அவ்வளவு மென்பொருட்கள் வந்துவிட்டனவா? எப்படி, யார் உருவாக்கினார்கள் இவைகளை? தன்னலமில்லா பல மனிதர்களின் உழைப்பு இதில் இருக்கிறது.
எல்லா நல்ல காரியங்களையும் போல் தமிழை கணினிமயமாக்க
- தன்னார்வலர்கள் தான் நிறை(ர)ய செய்கிறார்கள்
- இவர்களையும் இவர்கள் பங்களிப்பையும் ஒரு சிறு வட்டத்திற்கு வெளியே தெரியாது
- சந்தையில் வரவேற்பு மந்தம்தான்
- பெரும்பாலும் அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
திறமூல முயற்சிகள்
அ. லினக்ஸ்
கணினியின் பிரதானமான மென்பொருள் 'இயங்குதளம்' ஆகும். பரவலான லினக்ஸ் பொதிகள் தற்போது தமிழில் கிடைக்கிறது. வெங்கட் நிர்வகிக்கும் தமிழ் லினக்ஸ் புதிய வலைமனையில் (இன்னும் கட்டுமானத்தில் உள்ளது) மேலும் தகவல்கள் காணலாம். பழையது இங்கே. இதையும் படிக்கலாம். தமிழ் லினக்ஸ் - சில பொதிகள்
- மாண்ட்ரிவா (போன வாரம் வரைக்கும் மாண்ட்ரேக், கனெக்டிவா)
- ரெட் ஹேட்/ஃபெடோரா, தற்போதைய நிலவரம்
தமிழில் ஓபன் ஆஃபீஸ் முதலில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தது இந்திய அரசின் பாரதீய குழுவே. அடுத்து முகுந்தராஜ் ஒருங்கினைக்க முனைந்தார். பிற்பாடு 'ழ' கணினி குழு சேர்ந்துகொண்டது.
இ. க்னோம்/ கே.டி.ஈ
இது லினக்ஸ் சம்பந்தப்பட்டது. லினக்ஸ் இயந்குதளத்தின் கெர்னல் (மூலவர்) மற்றும் பயனருக்கும் இனைப்பாக இருக்கும் மென்பொருள்.
ஈ. மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸ்
தமிழில் மொசில்லா/ஃப்யர்ஃபாக்ஸ் முற்றிலுமாக மொழியாக்கம் செய்தது முகுந்தராஜ்/இளஞ்செழியனின் தமிழா குழுவினர்.
உ. இதர விஷயங்கள்
மற்ற முயற்சிகள்
அ. எழுத்துருக்கள்
தமிழ் எழுத்துருக்களில் சின்னதுரை ஸ்ரீவாஸ் மற்றும் உமர் தம்பி அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிட வேண்டியது.
- ஸ்ரீவாஸின் ஆவரங்கால், எழுத்துச்சீர்மை
- உமரின் ஒருங்குறி எழுத்துருக்கள்
- மேலும் சில எழுத்துருக்கள் தமிழாவிடமிருந்து
இது வேற ஒன்னுமில்லை, எந்த ஒரு விசைப்பலகையை கொண்டும் தமிழில் தட்டச்ச பயன்படுத்தும் மென்பொருட்கள்தான் இவை. எ-கலப்பை, முரசு போன்றவை.
- முகுந்தராஜின் எ-கலப்பை: பழசு (சில பேருக்கு இதுதான் வேலை செய்கிறது, அதான்), புதுசு
- முரசு
- சுரதாவின் பொங்குதமிழ். மேலும் சில கருவிகள்
மைக்ரோசாப்ட் இந்திய மொழிகளில் தன் ஆஃபீஸ் பொதிகள் பயன்படுத்துவதற்காக பாஷா என்றொரு தன்னார்வலர்கள் (இங்கேயா?) மூலம் இயங்கும் திட்டம் கொண்டுவந்தது. தமிழ் பகுதியை மாலன் ஒருங்கினைத்தார்.
ஈ. இதர விஷயங்கள்
மேலே சொன்ன முயற்சிகள் தவிர மதுரை திட்டம், கலோன் பல்கலைகழகத்தின் நிகண்டு, முரசு, பொன்விழி போன்ற சிறப்பான முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் விபரங்கள் உத்தமத்தின் இந்த வலை பக்கத்தில்.
சில முக்கியமான தமிழ் கணினிமயமாக்கல் முயற்சிகளை பற்றி சுட்டிகள் கொடுத்துள்ளேன். புதுசா யாராவது கணினியில் தமிழ்மயமாக்கும் முயற்சிகள் பற்றி தெரிஞ்சுக்க நினைச்சா உபயோகமா இருக்கும்னு நினைக்கறேன். தெரிஞ்சுண்டு அப்படியே அவரவர் நேரம் மற்றும் சக்திக்கு தகுந்தார்போல் இந்த முயற்சிகளுக்கு உதவி செய்தால் போற வழிக்கு புன்னியம் கிடைக்கும், இல்லையா? என்ன நான் சொல்றது?
April 13, 2005
கணினித் தமிழ் அகராதிகள்
இந்திய மொழிகளில் தமிழ்தான் இனையத்தில் வெகுவாக பரந்து விரிந்து வளர்ந்து வருகிறது. கணினிக்காக தமிழ் சொல்திருத்திகள் சில சந்தைகளில் கிடைக்கின்றன. இவைகளை பற்றி பரிச்சயமில்லை. ஆனால் திறவூற்று முயற்சிகள் சிலதும் நடந்துவருகின்றன, நன்றி: தமிழா குழு. மைக்ரோசாப்டும் பாஷா திட்டத்தை நிறுவியுள்ளது. ஆனால் இந்த தமிழ் திறவூற்று முயற்சிகள் வெகு முன்னமே நிறைவடைந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தன. தமிழக அரசின் ஆதரவைப்பெற்ற 'ழ' திட்டம் மற்றும் அதன் நிர்வாகிகள் (எழுத்தாளர் சுஜாதா உள்பட) கொஞ்சம் நிதானமாக சமயோசிதமாக மற்றும் தீர்க்கமாக செயல்பட்டிருந்தால் இந்நேரம் கணினித் தமிழுக்கு பொன்னேரமாக அமைந்திருக்கும். இந்த 'ழ' சர்ச்சை மற்றும் தமிழ் திறவூற்று முயற்சிகள் பற்றி வேறொரு நாள் எழுதவேண்டும்.
என் ஜன்னலுக்கு வெளியே
ஒரு அரை மணி நேரம் கழித்து 'நங்' என்று சத்தம் வந்தது. அவர்கள் என் ஜன்னலின் வெளித்தட்டில் முதல் (கல்) குச்சியை நட்டனர், சரி சரி, வைத்தனர்.
நேற்று பார்த்தேன், இரண்டு ரோஸ் நிற முட்டைகள் தயார். அப்ப அப்ப திரும்பி வாகு மாற்றிக்கொண்டு மறுபடியும் ஒரு 'குருகுக்கூஉ உ '. நல்ல வெயில் காய்கிறது. முதல் மாடியில் வாசம். நேரம் கிடைச்சா அப்படியே எட்டி நம்ம கணினித் திரையில் லேட்டஸ்ட் நியூஸ் மேலோட்டம் விடுவார். நான் கேட்கும் இசை பிடிச்சா நம்ம பக்கம் பார்கிறார் பிடிக்கலைன்னா அப்படியே கழுத்தை மட்டும் திருப்பிக் கொள்கிறார். ரொம்ப ஸ்டிரிக்டு.
வேற வேலையே ஓடறதில்லை. எப்பொ குஞ்சு பொரியுமோ தெரியலை. புத்தாண்டு ரிலீசுக்காக வெய்ட்டிங்!
April 08, 2005
வந்தனம்
இது என் முதல் பதிவு.
அது என்ன பேரு 'யக்ஞா'? என் முழு பெயர் யக்ஞநாராயணன். இதை இப்படி உச்சரிக்கலாம்.
இப்போ என்ன பன்ற? இப்போதைக்கு Purdue [பர்டூ] பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். எப்போ படிப்பு முடியும்? தேவனுக்கே தெலிசு.
எதுக்கு இந்த வலைப்பதிவு? வேற வேலை இல்லையா? இத்தனை நாள் பொருத்து பார்த்தேன், முடியலை. சும்மா அப்படி தமிழ்ல கிறுக்கினா ஒரு பழக்கமாகுமேனு.
தொலைஞ்சுபோ, சரி என்ன எழுதபோற? அதான் தலைப்புல இருக்குதே. அப்ப அப்ப எனக்கு தோனறதை (மாசம் ஒரு வாட்டி?) எழுதுவேன்.
வேற எதனாச்சும்? கொஞ்சம் டமில் பிரச்சினை இருந்தா திட்டிக்காட்டறதை விட சுட்டிக்காட்டினா சௌகரியம்.